Saturday, November 26, 2011

பாலை - ஈழம் - தேசியம்: நம்ம தலைவர் பிரபாகரன் இருக்காரா இல்லையா?

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவுலகில் மீண்டும் அடியெடுத்து வைக்கிறேன்.
முகநூலில் தொடர்ந்து நண்பர்களுடன் தொடர்பில் இருந்தாலும் ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும் முகநூலிலேயே எழுதிவிடுகிறேன.
உடனுக்குடனான எதிர்வினைகளை அங்கே காண முடியும் என்பதால்.

முகநூல் வழியாக பாலை திரைப்படம் பற்றியும் அதன் இயக்குநர் செந்தமிழன் பற்றியும் அறிந்தேன். அவரின் கோரிக்கை கடிதத்தையும் படித்தேன்.
அப்பொழுதே முடிவு செய்தேன். திரைஅரங்கு சென்றுதான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று. (இதுவரை நாமல்லாம் தியேட்டர் பக்கமே போரதில்லை. எல்லாமே டி.வி.டி.லதான்.)

கூட்டம் குறைவாக இருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு குறைவாக இருக்கும் என கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை.

பேஸ்புக்கிலும், பிளாக்கிலும் இன்னபிற இணைய தளங்களிலும் இப்படத்தைப் பற்றி பாராட்டுபவர்கள், வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்தவர்கள் இவர்களெல்லாம் வந்திருந்தால்கூட கொஞ்சமாவது கூட்டமாகத் தெரிந்திருக்கும். இவர்களை மட்டுமாவது நம்பித்தான் இயக்குனர் இப்படத்திற்கென பிளாக் எல்லாம் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

நேற்றிரவு நான் சென்ற காட்சியில் வெறும் 15 பேர்தான் இருந்திருப்பார்கள்.

அதில் ஒரு 6 பேர் இடைவேளை விட்டதுகூட தெரியாமல் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
(இது சரித்திரப் படம், வழமையான ஹீரோயிஸப் படங்களிலிருந்து வேறுபட்டது எனத் தெரியும்ல. பின்ன என்ன ......க்குடா தியேட்டருக்கு வந்தீங்க.) இவனுங்க வுட்ட குறட்டையில சில நல்ல வசனங்களைக் கேட்க
முடியாமல் போய்விட்டது.

படம் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்ததும் இணையத்தில் தேடினேன். பாலை பற்றி யாராவது எழுதியிருக்கிறார்களா என்று... ப்ரீவியு ஷோ பார்த்தவர்கள் மட்டுமே எழுதியிருந்தார்கள். ஒரு சில பிளாக்குகளில் இயக்குநரின் கடிதம் மீள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஒரு படம் விடாமல் முதல் நாளிலேயே பார்த்து பதிவெழுதி விமர்சிக்கும் எந்தப் பதிவரும் இதுவரை பாலையைப் பார்க்கவில்லையோ என்று தோன்றுகிறது. ஒரு வேளை அவர்களெல்லாம் “மயக்கம் என்ன” பார்க்கப் போயிருப்பார்கள்.

படம் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஏன்னா எனக்கு சினிமா பற்றியும் தெரியாது, பாலை பற்றியும் தெரியாது, ஈழம் பற்றியும் தெரியாது, தேசியம் பற்றியும் தெரியாது.

(பின்ன ஏன்டா பதிவு எழுதுன. தலைப்பு இப்படி வச்சிருக்க வெண்ண என யாரும் திட்டக் கூடாது.)

படம் ரெம்பப் பிடித்திருந்தது.
படத்தை ரெம்பவே மெதுவாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். ஒரு மணி நேரத்தில் முடித்துவிடலாம். ஆனால் 2 மணி நேரம் படம் ஓடுகிறது. இன்னும் கொஞ்சம் விருவிருப்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒருவேளை யதார்த்தமாக படம் எடுத்திருப்பதால் இப்படித்தான் எடுக்க முடியுமோ என்னவோ.

தன் இருப்பிற்கான போராட்டம் பற்றிய கதை. இதன் நீட்சியே தேசியம், தமிழ்
தேசியம், ஈழதேசியம்.
எனவேதான் ஈழ சூழ்நிலையை இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னான நிகழ்வில் கலந்து சொல்லியிருக்கிறார்.

அவங்க சிங்கம் நாமெல்லாம் புலி என்று சிங்கம் புலிக்கான (சிங்களவர் - விடுதலைப்புலிகளுக்கான) விளக்கத்தை விருத்திரன் கூறுவதிலிருந்து ஈழ வாசம் தொடர்கிறது.

அடுத்தவனை அடிச்சுதான் நாம வாழனும் என்று நினைக்காத தலைவர் கிடைப்பது அபூர்வம். தன் இனத்து இளைஞர்கள் செய்த சிறுதவறுதலால் நடந்த கொலைக்கு விருத்திரன் மன்னிப்புக் கேட்கும் காட்சி சூப்பர். (அவர் வருவார் என நாம எதிர்பார்த்து காத்துக்கிட்டுருக்கிற ‘தலைவர்(?) ’ உண்மையிலேயே இப்படில்லாம் நடந்துக்குவாரான்னு தெரியலை.)

போர் பாடம் நடத்தும் முதுவனின் விளக்கங்களுக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். (ஒரு தடவை தியேட்டர்ல போய் பார்த்தாச்சு, நான் மட்டும் மறுபடியும் போய் தனியா உட்காந்து பார்த்தா அது நல்லாயிருக்காது. அதனால சிடி வரட்டும் மீண்டும் பார்த்துக்குறேன். இயக்குநர் மன்னிக்கவும்)

போரின் போது பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட அவர்கள் நாசமாக்கப்படுவதை (அந்த வந்தேறிகள் அந்தக் கிழவியையும் விட்டுவைக்கவில்லை என்பதை) நாகரிகமாக காட்சிப்படுத்தியதற்கு இயக்குநருக்கு நன்றி. இதே வேற கமர்சியல் டைரக்டர்கள்லாம் சூப்பர் ரேப் சீன் வச்சு படத்தை A படமா ஆக்கியிருப்பாங்க.

முல்லைகுடி யாருக்கும் அடிமையில்லை, முல்லைக்குடிக்கு எந்த அடிமையும் தேவையில்லை என்ற முதுவனின் வார்த்தைகள் கவனிக்கத் தக்கவை. போரின் தொடர்ச்சி என்பது இல்லாமல் நிரந்தர தீர்வும் அமைதியும் ஏற்பட இதுவே வழி. கைதிகளும் பிணைக் கைதிகளுமே போரின் நீட்சிக்கு காரணம்.

நாம் இப்பொழுது வாழ்வதற்கு நம் முன்னோர்களின் போராட்டமே காரணம் என்ற வசனத்துடன் படம் முடிவடைகிறது.

தமிழினத் தலைவர் (?) பிரபாகரன் கொல்லப்பட்டாரா இல்லை உயிருடன் இருக்கிறாரா என்ற விவாதத்திற்குள் சென்றும்கூட அதற்கு ஒரு சார்பான முடிவுகளை இருதரப்பாருமே எடுத்துக் கொண்டிருக்கும் போது, எதுவுமே சொல்லாமல் அதை அதே நிலையிலேயே இயக்குநரும் விட்டு முல்லைக்குடி தலைவர் என்ன ஆனார் என்பதைச் சொல்லாமலேயே விட்டு விட்டார்.

“எங்க தலைவர் திரும்பி வருவாருடா” என்று யாரையும் வசனம் பேச வைக்கவில்லை. இது ஒன்றே எங்களுக்கு திருப்தி.

இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத தலைவரை எதிர்பார்த்து காத்திருப்பதைவிட இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த கட்ட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைக் கையிலெடுத்து முன்னேற வேண்டும். அந்நேரம் முந்தைய வரலாற்றையும் படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்பதுதான் பாலை நமக்கு உணர்த்தும் பாடம்.

தியேட்டர்ல இருந்து தூக்குறதுக்குள்ள சீக்கிரம் போய் பாருங்க மக்களே!

Monday, August 22, 2011

சென்னைல அப்படி என்னதான் இருக்கோ தெரியலையே....

இன்று சென்னை தினம்.
இது எந்த தினம்? இந்த நாளின் பின்னணி என்ன என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

சென்னை என்றாலே அது உருவான நாள் முதற்கொண்டு எல்லோருக்கும் ஒருவித ஈர்ப்பை உண்டாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது சினிமா.
“அடுத்த வருடமே அம்பானியாகிவிடலாம்” என்பது போன்ற பற்பல கனவுகளில் இன்றும் பலர் சென்னைக்கு இடம் பெயர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் வந்த பின் யதார்த்தத்தை உணர்ந்து கொண்டாலும்கூட ஏனோ சென்னையை விட்டு விட்டு திரும்பிச் செல்லாமல் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்று சென்னையிலேயே இருந்து விடுகிறார்கள். பெரிய மாற்றங்கள் ஏற்படாது என்று நன்கு தெரிந்தும், சென்னையின் பலவித சிக்கல்கள், தொல்லைகள், போக்குவரத்து நெரிசல், ஏமாற்றுதல்கள், பித்தலாட்டங்கள், போட்டி, பொறாமை, வேலையின்மை, விவேக் காமெடியில் சொல்வது போன்று காலித்தனம் செய்யும் போலிச் சாமியார்கள், நாஸ்தி செய்யும் வாஸ்து சாஸ்திரம் சொல்பவர்கள்,
இப்படி என்னற்ற சங்கடங்கள் மனதில் இருந்தும், சென்னையை எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டாலும் பண்டிகை விடுமுறைகளில் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு அங்கே இருந்து விடலாம் என்று மனம் சொன்னாலும் ஏனோ அதையும் தாண்டி சென்னை விட்டு அகல முடியாத நிலை பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

சென்னைல அப்படி என்னதான் இருக்கோ தெரியலையே....

எனக்கும் இதே ஃபீலிங்ஸ்தான் மக்களே. சென்னைக்கு வந்து 8 வருடங்களாகி விட்டது. ஆனால் இன்னும் சென்னையை எனக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் சென்னை என்னை விடமாட்டேன் என்கிறது.

Saturday, April 2, 2011

பாகிஸ்தான் VS இலங்கை - வெல்லப் போவது யார்?

ஹய் நண்பர்களே! மிக நீண்ட காலத்திற்குப் பின் மீண்டும் பதிவுலகிற்கு வந்துள்ளேன். எழுதவில்லை என்றாலும் அவ்வப்போது வந்து நண்பர்களின் பதிவைப் படிப்பதுண்டு. இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும்தானே விளையாடுகின்றன. தலைப்பில் பாகிஸ்தான் எப்படி வந்தது என்று கேள்வியும் கேட்கலாம். சும்மா ஒரு கற்பனைதான். ஆனால் இதில் ஒருவித அரசியல் இருப்பதால் இப்படித் தலைப்பிட்டுள்ளேன். அரையிறுதியில் இந்தியா வென்றது. எனவே பாகிஸ்தான் இறுதிக்கு செல்ல முடியவில்லை. ஒருவேளை பாகிஸ்தான் வென்றிருந்தால் என் தலைப்பில் இருப்பதுபோலவே பாகிஸ்தான் VS இலங்கை என்றுதான் இன்றைய ஆட்டம் இருந்திருக்கும். இப்படி இருந்திருந்தால்...
இந்தியாவும் இலங்கையும் விளையாடும் இந்நேரத்தில் எப்படியெல்லாம் மெஸேஜ் வருகிறது என்பதைப் பார்த்தால் அய்யோ ரெம்பக் கொடுமை. உதாரணத்திற்கு ஒன்று.

உலகக்கோப்பை சீதையாம்.இந்தியா ராமனாம்.1983ல் மணமுடித்தபின் 1996ல் ராவணன்(இலங்கை)அவளை கவர்ந்து போய்விட்டானாம்.இன்று மீட்பு யுத்தமாம். இப்படி ஒரு குறுஞ்செய்தி பரவிக்கொண்டிருக்கிறது... இதன் படி பார்த்தால் 96 க்குப்பின் சீதையை ஆஸ்திரேலியாக்காரன் கொண்டு போய் பனிரெண்டு ஆண்டுகளாக வைத்திருக்கிறானே? சரி அது போகட்டும். இன்றைக்கு மேட்சில் தோற்றுவிட்டால் ராவணன் ஜெயித்து சீதையை அவனே வைத்துக் கொண்டு விடுவான், ராமாயணமே தப்பாகி விடுமே! குறுஞ்செய்தி தேசபக்தர்களே...கொஞ்சம் திங்க் பண்ணுங்க...


என்றெல்லாம் மெஸேஜ் வருகிறது.அதிருக்கட்டும்.நம் தலைப்பின் படிஇப்படி இருந்தால்...

அதாவது பாகிஸ்தானும் இலங்கையும் இறுதிப் போட்டிக்கு வந்திருந்து... இப்போது விளையாடிக் கொண்டிருந்தால்...

நீங்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பீர்கள்?


பாகிஸ்தான் தீவிரவாத நாடு, இந்தியாவுக்கு பரம எதிரி என்றெல்லாம் கருத்துப் பரவல் இங்கே அதிகம். அதுவும் நம் தமிழக பத்திரிகைகள் செய்தி வெளியிடும் தன்மையே உங்களுக்கு நன்கு தெரியும்.


இன்னொரு பக்கம் இலங்கை.

தமிழர்களை இனப்படுகொலை செய்த நாடு. இன்றும் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரங்களையே கேள்விக்குறியாக்கி வருகிறது.


இதையெல்லாம் தாண்டி நடுநிலையாக அதாவது விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கக் கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் இங்கே இந்தக் கேள்வியை முன் வைக்கிறேன்.


உங்கள் ஆதரவு யாருக்கு?

யார் வெல்ல வேண்டும் என நீங்கள் விரும்புவீர்கள்?


பின்னூட்டத்திலும் சொல்லலாம். வலது புறம் உள்ள ஆப்ஷனிலும் கிளிக் செய்து விட்டுப் போகலாம்.


பதில் அவசியம்.


நன்றி.

மீண்டும் சந்திப்போம்.


இப்படிக்கு,

உங்கள் புகழன்.

Thursday, March 10, 2011

வா வா என் தேவதையே...







Meri Mehbooba
Here is the song 'Meri Mehbooba' from movie 'Pardes'.

kisi roz tumse mulaaqaat hogi...

Some day I will meet you...

meri jaan us din mere saath hogi

My love, from that day forth, you will be with me.

magar kab na jaane yeh barsaat hogi

But who knows when you'll shower down your love;

mera dil hai pyaasa mera dil akela

my heart is thirsty, my lonely heart!

zaraa tasvir se tu nikalke saamne aa

Just step out from the picture (in my mind) and come before me!

meri mahabuuba

My love

meri taqdir hai tu machalke saamne aa

You're my fate; fight out (of the picture) and come before me!

meri mahabuuba...

My love...

zaraa tasvir se tu nikalke saamne aa

Step out from the picture (in my mind) and come before me!

meri mahabuuba

My love

nahin yaad kabse magar main huun jabse

I don't even remember since when, perhaps as long as I've existed,

mere dil mein teri muhabbat hai tabse

I have loved you.

main shaayar huun tera tu meri ghazal hai

I'm your poet, and you are my poem.

bari beqaraari mujhe aajkal hai...

Lately, I'm restless with longing for you.

zaraa tasvir se tu nikalke saamne aa

Just step out from the picture (in my mind) and come before me!

meri mahabuuba...

My love...

zaraa tasvir se tu nikalke saamne aa

Just step out from the picture (in my mind) and come before me!

meri mahabuuba

My love

jaane kahaan se lo aa gayi hai voh

Who knows where she's come from!

bhalaa kaun hai voh hamein bhi bataao

No matter who she is, just tell me!

yeh tasvir uski hamein bhi dikhaao

At least show me this picture of her!

ye qisse sabhi ko sunaate nahin hai

This story shouldn't be told to just everyone,

magar doston se chhupaate nahin hai

but you can't hide it from friends!

tere dard-e-dil ki davaa ham karenge

I'll cure the pain in your heart;

na kuchh kar sakein to duaa ham karenge...

If I can't do anything, then I'll pray for you!

tarapkar aayegi voh tujhe mil jaayegi voh

She'll struggle out (of the picture) and come; you'll meet her,

teri mahabuuba

your love!

kisi roz tumse mulaaqaat hogi...

Some day I will meet you...

meri jaan us din mere saath hogi

My love, from that day forth, you will be with me.

magar kab na jaane yeh barsaat hogi

But who knows when you'll shower your love upon me;

mera dil hai pyaasa mera dil akela

my heart is thirsty, my lonely heart!

zaraa tasvir se tu nikalke saamne aa

Just step out from the picture (in my mind) and come before me!

meri mahabuuba...

My love

Wednesday, March 9, 2011

விண்ணகத்து தேவதைகளின் ராணி



--MALE--
Kitna pyara tujhe rab ne banaya

How lovely has God made you

Jee kare dekhta rahun

I want to keep looking at it

--FEMALE--
Kya?

What?

--MALE--
Kitna pyara tujhe rab ne banaya

How lovely has God made you

Jee kare dekhta rahun

I want to keep looking at it

Oh kitna sona tujhe rab ne banaya

How beautiful has God made you

Jee kare dekhta rahun

I want to keep looking at it

--FEMALE--
tu hai pagal , tu hai joker , tu hai dilbar jani

you are mad,you are a clown,you are the one mY heart likes,my life

sabse pyara mera yara , raja hindustani

the most loveable friend ,Raja Hindustani(king of India)



--MALE--
ambar se ayee hai,pareeyon ki rani

from heaven she has come,the queen of fairies

dekh jise hoti hai sab ko haraini

seeing her everyone is astonished

ambar se ayee hai,pareeyon ki rani

from heaven she has come,the queen of fairies

dekh jise hoti hai sab ko haraini

seeing her everyone is astonished

sundar sa mukhda hai , phoolon ke jaisa

beautiful is her face , like flowers

hoga na duniya mein koi aisa

there cant be another like that in the whole wide world

--FEMALE--
kitna seeda , kitna sacha , mera raja , kitna achaa

how simple ,how truthful ,my king ,how good hearted

mujhko to achi lagti hai teri har nadani ,

i love all your antics

sabse pyara mera yara , Raja Hindustani

most loveable of all,my friend,Raja Hindustani



--MALE--
koyal ke jaisi hai teri ye bolee,murat ke jaisi hai surat ye bolee

nightingale like is your voice,model statue like is yourinnocent face

bagon mein jao na dil mera gabaraye,paron mein kante hai na chub jaye

dont go in the garden,I get afraid,that some thorn might prick your foot

--FEMALE--
mein deewani ho na jaoon , teri baaton mein kho na jaon

hope i dont go mad ,getting lost in your talks

udta badal , behta pani , bole rut mastani

flying cloud ,flowing water,says this enchanted

sabse pyara mera yara , Raja Hindustani

most loveable of all,my friend,Raja Hindustani


--MALE--
Kitna pyara tujhe rab ne banaya

How lovely has God made you

Jee kare dekhta rahun

I want to keep looking at it

Oh kitna sona tujhe rab ne banaya

How beautiful has God made you

Jee kare dekhta rahun

I want to keep looking at it

--FEMALE--
tu hai pagal , tu hai joker , tu hai dilbar jani

you are mad,you are a clown,you are the one mY heart likes,my life

sabse pyara mera yara , raja hindustani

the most loveable friend ,Raja Hindustani(king of India)

கண்டேன் கண்டேன்





கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை


பட்டின் சுகம் வெல்லும் விரல்

மெட்டின் சுகம் சொல்லும் குரல்

எட்டித் தொட நிற்கும் அவள்

எதிரே எதிரே


பிள்ளை மொழி சொல்லை விட

ஒற்றை பனை கள்ளை விட

போதை தரும் காதல் வர

தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை
மோதும் மோதும் கொலுசொலி

ஏங்கும் ஏங்கும் மனசொலியை பேசுதே

போதும் போதும் இதுவரை

யாரும் கூறா புகழுரையே கூசுதே

பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி

பேசாது போனாலும் நீ என் சங்கதி
கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை

விக்கல் முதல் தும்மல் வரை

கட்டில் முதல் தொட்டில் வரை

அவளை அவளை அவளை அவளை
கண்டேன் கண்டேன் கண்டேன்கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன்கொண்டேன் ஆவலை
காணும் காணும் இருவிழி

காதல் பேச இமைகளிலே கவிதைபடி

ஏதோ ஏதோ ஒருவித

ஆசை தோன்ற தனிமையிது கொடுமையடி

நீங்காமல் நாம் சேர நீளமாகும் இப்புவி

தூங்காமல் கைசேர காதல் தங்குமே

ரெட்டைகிளி அச்சத்திலே

நெஞ்சுக்குழி வெப்பத்திலே

சுட்டித்தனம் வெட்கத்திலே

அடடா அடடா அடடா அடடா
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை பட்டின் சுகம் வெல்லும் விரல் மெட்டின் சுகம் சொல்லும் குரல் எட்டித் தொட நிற்கும் அவன் எதிரே எதிரே.. பிள்ளை மொழி சொல்லை விட ஒற்றை பனை கள்ளை விட போதை தரும் காதல் வர தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

Saturday, January 23, 2010

அச்சோ இதுக்கெல்லாமா இப்படி?

everyone ask me why i smoke so much .....






i was not like this ..........




I was like this



until i saw that girl ....





I liked her so much that i told a lot of lies to her example "u r soooo cute"






I promised her a lot..












I gave her costly gifts on feb 14th.. like this...









I gave her a shock like this when she accepted my proposal












I used to talk whole night and do this at office...











When ever i go out with my girl friend , My friends used to give me this look







then I used to give them a pose like this














At last my girl friend gave the roses to me like this... and went away














i didn't know what to do , where to go













…..then i got my precious


















.......and i started smoking & drinking...

வால் பையன் கவலைப்படாதீங்க!
சீக்கிரமே இன்னொரு பொண்ணு உங்கள சின்சியரா லவ் பண்ணணும்னு (நீங்க நம்பாத) கடவுள்கிட்டல்லாம் வேண்டிக்கிறோம்.
இந்த பிப்ரவரியில கொடுக்குறதுக்கு ஒரு நல்ல கிப்ட் வாங்கி வைச்சுக்கங்க!
டிஸ்கி: மேல உள்ளது எல்லாம் சும்மா லுலுலா...ய்க்கு... மத்தபடி வால்பையன் புகைப்பிடிப்பதும், தண்ணியடிப்பதும் எதற்காக என்று சத்தியமாக எனக்குத் தெரியாது.