இந்தப் பதிவின் இறுதியில் உங்களுக்கு ஒரு கேள்வி கேட்கப்படும்கேள்வியைப் படித்ததும் உடனடியாக பதில் சொல்லுங்கள்.நிறுத்தி யோசிக்காதீர்கள். கேள்விக்கான பதில் உங்கள் உள்ளத்தில் முதலில் என்ன வருகிறதோ அதை உடனே கூறி விடுங்கள். (உங்களுக்கு நீங்களே)மிகை சிந்தனை வேண்டாம். பதிவை முழுவதும் படித்து முடித்த பின் உங்களுக்கே தெரியும். ஒரு கேள்விக்கு பதில் கூறும் முன்பு அடுத்த வரிக்கு செல்ல வேண்டாம். ஒவ்வொரு கேள்வியின் பதிலையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என்றோ கணக்கு வைக்க வேண்டுமென்றோ அவசியம் இல்லை. சில நேரம் எந்தக் கேள்வியும் முந்தைய கேள்விகளுக்கு தொடர்பே இல்லாமலும் இருக்கும். இறுதியாகக் கேட்கப்படும் கேள்விக்கான பதிலில் உங்களுக்கான ஆச்சரியம் காத்திருக்கிறது.
போலாமா.Start: How much is: 15 + 6 =
பதில்: 21
சரி இது 3 + 56 =
பதில்: 59
இது எவ்வளவு 89 + 2 =
பதில்: 91
இதுவும் எளியதுதான் 12 + 53 =
அட சரிதான் 65
அப்ப இதுக்கு 75 + 26 =
101 ஐ நமக்கு கணக்குல்லாம் கரெக்டா வருதே
கோவப்படாதீங்க இதுக்கும் விடை சொல்லுங்கள் 25 + 52 =
சரி 77
அடுத்து இது 63 + 32 =
ஓகே 95
எனக்கு தெரியும். கணக்கு என்றாலே எல்லோருக்கும் கொஞ்சம் கஷ்டமானதுதான்.ஆனாலும் நீங்கள்லாம் ரெம்ப கரெக்டாவே பதில் சொல்லிட்டீங்க
இன்னும் கொஞ்சம் மட்டும்
பதில் சொல்லுங்கள் 123 + 5 =
சரி 128
சீக்கிரமா ஒரு கலரை நினையுங்கள்!
QUICK! THINK ABOUT A COLOR !
இன்னும் கொஞ்சம் கீழே போங்க....
இன்னும் கொஞ்சம் மட்டும்....
நீங்க நினைச்ச கலர் சிவப்பு தானே?
You just thought about a red , didn't you?
இது இல்லையென்றால் நீங்கள் வித்தியாசமானவர்.
உங்கள் சிந்தனை நார்மலானது அல்ல. அப்நார்மல்...
If this is not your answer, you are among 2% ofpeople who have a different, if not abnormal, mind.
98%பேர் இந்த பரிட்சையில் பதில் கூறும்போது சிவப்புக் கலர் என்றுதான் சொல்லியுள்ளார்கள்.
98% of the folks would answer a red while doing this exercise.
இதை நீங்கள் நம்பவில்லையென்றால் உங்கள் நண்பர்களிடம் இதைக் கூறி பரிட்சித்துப் பாருங்கள்.
98% பேரில் நானும் ஒருவன்
பெண்ணே!

கவிதையின்
விதையே - உன்
வளர்ச்சிதான்
என்னின் மலர்ச்சி!
உன்
இலைகள் என்
உணர்வுகள்!
உன்
பூக்கள் என்
நுகர்வலைகள்!
.........
........
.......
வலிக்கச் செய்த வரிகள்

ஜில்லென்று ஒரு ரயில் பயணம்
அன்பு நண்பர்களே!
ப்ளாக் பக்கம் வந்தே பல மாதங்கள் ஆகிவிட்டன. மீண்டும் எழுத வந்திருக்கிறேன். இந்த முறை நான் எழுதுவதோடு மட்டுமின்றி பிற பதிவர்களையும் எழுத வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பதிவை இடுகின்றேன். (அவங்கள்லாம் ஏற்கனவே ரெம்ப எழுதிக்கிட்டுதான் இருக்காங்க - அது வேற விஷயம்)
இது ஒரு தொடர் பதிவு.
அய்யோ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! தொடர் பதிவு என்றதும் ஓடி ஒளிந்து கொள்ளாதீர்கள். என் அன்புக் கட்டளையை ஏற்று செயல்படுத்துவீர்கள் என்று நினைக்கிறேன். சரி விஷயத்திற்கு வருவோம். கீழே உள்ள வீடியோ கிளிப்பிங் சமீபத்தில் நான் பார்வையிட்டது.
நீங்களும் பார்வையிடுங்கள். பதிவிடுங்கள்.
ஆம்! இந்த கிளிப்பிங்கைப் பார்த்து விட்டு இதற்கு தகுந்த சிறுகதை ஒன்று (அது பெரிய சிறுகதையாகவும் இருக்கலாம், ஒருபக்க சிறுகதையாகவும் இருக்கலாம்) எழுதிப் பதிவிட வேண்டும். கண்டிப்பாக படத்திற்கு தகுந்த கதையாக இருக்க வேண்டும்.
வீடியோ கிளிப்பிங் போகலாமா!
இரத்தத்தை உறைய வைக்கும் இரயில் பயணம்!
முன் குறிப்பு: பெண்கள், குழந்தைகள், இதய பலவீனமுள்ளவர்கள் தயவு செய்து படக் காட்சியைப் பார்வையிட வேண்டாம்.
பின் குறிப்புகள்:
1. படக் காட்சிக்கு தகுந்த சிறுகதை எழுதிப் பதிவிட வேண்டும்.
2. நீங்கள் பதிவிடும் தளத்திலும் இந்த கிளிப்பிங்கை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது எனது தளத்திற்கும் லிங்க் கொடுக்கலாம்.
3. குறைந்தது அடுத்த இரண்டு பதிவர்களை அழைக்க வேண்டும்.
4. மறக்காமல் பதிவிட்டபின் எனக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
5. ரெம்ப முக்கியம் கமென்ட் போட்டுட்டுப் போங்க! (கேட்டு வாங்குறது அசிங்கமாத்தான் இருக்கு - இருந்தாலும் பரவாயில்லை)என்ஜாய் மக்கள்ஸ்!
நான் அழைக்கும் இரு பதிவர்கள்:
1. கதாசிரியை திவ்யா
2. சாத்தான் குளம் ஆசிப் மீரான்
பி.பி. குறிப்பு:
இரண்டாம் பதிவரை நான் அழைக்கக் காரணம் அடுத்த பதிவில்...
அல்லாவும் ஈஸ்வரனும் வால்பையனும்
இதற்கு முந்தைய சினிமா பற்றிய தொடர்பதிவில் ஒரு கேள்வி
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
பழையதில் கிழக்குச் சீமை - இன்றுவரை அண்ணண் தங்கை பாசம் என்றால் பாசமலர் படத்தைத்தான் சொல்வார்கள். ஆனால் எனக்கு என்னவோ கிழக்குச் சீமை முன்னதை முந்திவிட்டதாகத் தோன்றுகிறது. ஏ.ஆர்.ஆர். இசையும் ஒரு காரணம். புதியதில் அரண் - படம், சினிமா கலை, நுணுக்கம் இதையெல்லாம் தாண்டி நம் நாட்டிலேயே நம் இராணுவத்தால் பாதிக்கப்படும் கஷ்மீரிகளின் சோகங்கள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.
இந்த பதிவுக்கு நண்பர் வால்பையன் பின்னூட்டமிட்டிருந்தார். நானும் பதில் கூறியிருந்தேன்.சாட்டிலும் பேசினோம். அவற்றை கீழே தருகிறேன்.
வால்பையன் said...
//அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//
இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது!
ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு
புகழன் said...
---வால்பையன் said... /
அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//
இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது!ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு
---ராமன் அப்துல்லா படத்துல என்ன பாட்டு வரும்? நான் அந்தப் படம் பார்க்கவில்லை.
புகழன் said...
இப்பத்தான் கூகுள்ல தேடினேன்.
அந்தப் படத்தில் வரும் பாடல் “உன் மதமா” பாடல்
அதுவும் பிடிக்கும்.
கேட்டிருக்கிறேன்.
வால்பையன் said...
நானும் அதைத் தான் சொன்னேன். மதத்தை தேடி நாம் போகவேண்டியதில்லை.நல்லவர்களை தேடி மதம் வரும்.
புகழன் said...
அது சரி “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடலில் எங்கே மதம் வருகிறது?
இந்த அளவு கொஞ்சம்கூட புரியாமல் கண்ணில் கடவுள் மறுப்பு என்னும் திரையைப் போட்டு எல்லாவற்றையும் பார்ப்பது ஏன்?
எனக்குப் பிடிக்கும் என்று சொன்ன அந்தப் பாடலில் கஷ்மீரிகளின் துயரம் பற்றிய வரும் அவ்வளவே..
மதம் பற்றியோ, கடவுள் பற்றியோ அதில் குறிப்பிடப்படவே இல்லை.
யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வால்பையன் said...
அல்லா என்பதன் சரியான அர்த்தம் எனக்கு தெரியாது தான். ஆனாலும் பள்ளியில் படிக்கும் சிறுவனைக் கேட்டாலும் அல்லா என்பது முசல்மான்களின் கடவுள் என்று தான் சொல்லுவான். உண்மையில் அந்த பாட்டை நான் கேட்டதில்லை. அந்த பாட்டில் எங்கேயெனும் மக்களின் துயரம் இருக்கலாம். முதல் வரியில் அது எனக்கு தெரியவில்லை.
வால்பையன் said...
//யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.//
கடவுள் மறுப்பு என்பது திரை அல்ல. அதுவே விளிப்பு நிலை.
இனி சாட்
11:40 AM வால்: :)
11:42 AM me: ஏங்க நான் பொதுவா யதார்த்தமா எழுதுறதயெல்லாம் ஒருசார்பா எழுதுற மாதிரி கமென்ட் போடுறீங்க?
வால்: :)
11:43 AM appati illai
manathil iruppathu thaan veliyil varum
athu ungkalukkum enakkum porunthum
me: அந்த பாடல் கேட்டுள்ளீர்களா?
11:44 AM வால்: illaiyenru terkanave sollivitten
me: லிங்க் தருகிறேன் கேளுங்கள்
-------------------------------------------------
அதுவே இந்தப் பதிவு இப்படி இருந்திருந்தால்?
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
........................... ......... ....
புதியதில் கண்ணெதிரே தோன்றினாள் - படம், சினிமா கலை, நுணுக்கம் இதையெல்லாம் தாண்டி நட்புக்கும் காதலுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை யதார்த்தமாக சொல்லியிருப்பார்கள். அதில்வரும் “ஈஸ்வரா வானும் மண்ணும்” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.
வால்பையனுடைய பின்னூட்டம் இப்படித்தான் இருந்திருக்குமோ?
வால்பையன் said...
//அதில்வரும் “ஈஸ்வரா வானும் மண்ணும்” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//
இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது! ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு
புகழன் said...
---வால்பையன் said... //அதில்வரும் “ஈஸ்வரா வானும் மண்ணும்” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//
இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது! ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு
---ராமன் அப்துல்லா படத்துல என்ன பாட்டு வரும்? நான் அந்தப் படம் பார்க்கவில்லை.
புகழன் said...
இப்பத்தான் கூகுள்ல தேடினேன்.
அந்தப் படத்தில் வரும் பாடல் “உன் மதமா” பாடல்
அதுவும் பிடிக்கும்.
கேட்டிருக்கிறேன்.
வால்பையன் said...
நானும் அதைத் தான் சொன்னேன். மதத்தை தேடி நாம் போகவேண்டியதில்லை. நல்லவர்களை தேடி மதம் வரும்.
புகழன் said...
அது சரி “ஈஸ்வரா வானும் மண்ணும்” என்ற பாடலில் எங்கே மதம் வருகிறது?
இந்த அளவு கொஞ்சம்கூட புரியாமல் கண்ணில் கடவுள் மறுப்பு என்னும் திரையைப் போட்டு எல்லாவற்றையும் பார்ப்பது ஏன்?
எனக்குப் பிடிக்கும் என்று சொன்ன அந்தப் பாடலில் நட்பின் பயன்கள் பற்றி வரும் அவ்வளவே..
மதம் பற்றியோ, கடவுள் பற்றியோ அதில் குறிப்பிடப்படவே இல்லை.
யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வால்பையன் said...
ஈஸ்வரா என்பதன் சரியான அர்த்தம் எனக்கு தெரியாது தான். ஆனாலும் பள்ளியில் படிக்கும் சிறுவனைக் கேட்டாலும் ஈஸ்வரா என்பது இந்துக்களின் கடவுள் என்று தான் சொல்லுவான். உண்மையில் அந்த பாட்டை நான் கேட்டதில்லை. அந்த பாட்டில் எங்கேயெனும் நட்பு இருக்கலாம். முதல் வரியில் அது எனக்கு தெரியவில்லை.
வால்பையன் said...
//யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.//
கடவுள் மறுப்பு என்பது திரை அல்ல. அதுவே விளிப்பு நிலை.
பி.கு: எப்டில்லாம் யோசிக்கிறாங்கப்பா................ தாங்க முடியல....
தமிழ் சினிமா இழந்தது...
முன் குறிப்பு: கடைசியில் பின் குறிப்பு உள்ளது தவறாமல் படித்து விட்டுச் செல்லவும்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
5 வயதிருக்கும் (சரியாகத் தெரியவில்லை). முதலில் பார்த்த படம் நன்றாக நினைவு இருக்கின்றது. எங்க அப்பா வேலை செய்த கடையின் முதலாளி ஒரு தியேட்டர் வைத்திருந்தார். எங்கப்பா எங்களையெல்லாம் அங்கதான் கூட்டிட்டு போவாங்க. என்னைய முதல்ல கூட்டிட்டு போன படம் ரஜினி நடித்த பில்லா. படத்துல வர்றது எல்லாம் உண்மைதான்னு நினைக்கிற வயசுதான அது. அதனால எங்க அப்பாகிட்ட கேட்டேன். ரஜினி செத்த பிறகு மறுபடியும் எப்படி வந்து நடிக்கிறார்னு. அப்பத்தான் எங்க அப்பா டபுள் ஆக்ட் பற்றியும் சினிமா என்பது உண்மை அல்ல என்பது பற்றியும் விளக்கிச் சொன்னாங்க. அதனால எனக்கு விவரம் தெரிந்த பின் எந்த படமும் எந்த உணர்வையும் ஏற்படுத்தல. ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்காகத்தான் எடுத்துக்கிட்டேன். எனவே எந்தப் படமும் அவ்வளவாக மனசில் நிக்கல. அப்புறமா உமர் முக்தார் நினைவில் உள்ளது. தற்போது பழைய படங்களை மீண்டும் தற்கால அறிவு, அரசியல், சமூக நிலை இவற்றோடு ஒப்பிட்டு கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக பார்க்கிறேன்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
ரமணா - அழகி இரண்டில் எதுவென்று தெரியவில்லை. ஏனெனில் இரண்டுமே 5 வருடங்களுக்கு முன் பார்த்தது. அதன் பின் படம் ஏதும் பார்க்கவில்லை.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தசாவதாரம் - விசிடிலதான்.
இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துருக்காங்களே. நாம ஜாலியா இங்க திருட்டு விசிடில பார்க்கிறோமேன்னு உணர்ந்தேன்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
பழையதில் கிழக்குச் சீமை - இன்றுவரை அண்ணண் தங்கை பாசம் என்றால் பாசமலர் படத்தைத்தான் சொல்வார்கள். ஆனால் எனக்கு என்னவோ கிழக்குச் சீமை முன்னதை முந்திவிட்டதாகத் தோன்றுகிறது. ஏ.ஆர்.ஆர். இசையும் ஒரு காரணம். புதியதில் அரண் - படம், சினிமா கலை, நுணுக்கம் இதையெல்லாம் தாண்டி நம் நாட்டிலேயே நம் இராணுவத்தால் பாதிக்கப்படும் கஷ்மீரிகளின் சோகங்கள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
ரஜினியின் குசேலனைத் தொடர்ந்த கர்நாடகப் பிரச்சினை.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
தொழில்நுட்பம் பற்றியெல்லாம் தெரியாது. தசாவதாரம் கொஞ்சம் திகைக்க வைத்தது. நல்ல பிரமாண்டம் (ஓசில பார்த்தா அப்படித்தான் இருக்கும் போல) :)
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறையவே படிப்பேன். என் நண்பர்கள் கூட சொல்வார்கள். படமே பார்க்கிறதில்லைன்னு சொல்ற. பின்ன எப்படி எல்லா படத்தப் பத்தியும் கரெக்டா சொல்லுறன்னு. இப்பல்லாம் விமர்சணங்கள் படித்தாலே பாதி பார்த்தமாதிரி ஆகிடுது. அப்புறம் இருக்கவே இருக்கு ப்ளாக் முழுப்படத்தையும் இன்ஞ் பை இன்ஞ்சா விவரிச்சு எழுதி கண்ணு முன்னால கொண்டு வந்துடுறாங்க.
7. தமிழ்ச்சினிமா இசை?
இசை என்றாலே இளையராஜாதான் சட்டென்று ஞாபகத்துக்கு வரும்.
அடுத்து ஏ.ஆர்.ஆர்.
ஆனா இப்பல்லாம் நிறைய இசைக்கு பஞ்சமாகிவிட்டதுபோல் தமிழ் இசையமைப்பாளர்கள் நடந்து கொள்கின்றனர். காப்பி பேஸ்ட் பண்ணுற பிளாக்கர்கள் பரவாயில்லையோ என்று தோனுது.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஹிந்தியில் - லகான்,
ஆங்கிலம், ஈரானியப் படங்கள் எப்பவாவது பார்ப்பதுண்டு.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
அப்படி ஒரு வாய்ப்பை தமிழ் சினிமா இழந்து விட்டது. இனிமேலும் அந்த பாக்கியம் தமிழ் சினிமாவிற்கு இல்லை என்றே தோன்றுகிறது.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பொழுதுபோக்குக்காக என்றால் எதிர்காலம் நன்றாகவே இருக்கும் (எவ்வளவு மோசமாக இருந்தாலும் தலிவா என்று கையசைத்து விசிலடிக்கும் ரசிகர்கள் இருக்கும்வரை). ஆனால் மக்கள்ஸ் அதை மட்டும் எதிர்பார்த்து படம் பார்க்கச் செல்வதில்லையே.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அந்த நாளை ரெம்பவே எதிர்பார்க்க வேண்டும் நாம். வாசிப்புப் பழக்கம் குறைந்ததற்கு தற்கால அதிவேக கலாச்சாரத்துடன் சினிமாவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே வாசிப்புப் பழக்கம் பெருகும்.
பின்குறிப்பு: எல்லோரும் தொடர் பதிவு எழுதி வெளையாடுறாய்க. நம்மல சேத்துக்கவே மாட்டிங்கிறாய்களேன்னு ரெம்பவே வருத்தமா இருந்திச்சு. யாராவது கூப்பிட மாட்டாங்களான்னு ஒவ்வொரு தொடர்பதிவையும் விடாம படிப்பேன். ஆனா பூச்சாண்டி என்னைய எழுத அழைத்ததும் எனக்கு திக்குனு ஆகிப் போச்சு. (தொடர்பதிவு எழுத அழைத்தால் மறுக்கக் கூடாது என்பது பதிவுலகில் எழுதப்படாத விதியாமே) அப்பறம்தான் யோசிச்சேன். ஆசைப் பட்டது ரெம்பத் தப்புன்னு. என்ன எழுதுறது. நாம என்ன பெரிய்ய எழுத்தாளரா என்ன?
சினிமா பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
இசை பத்தி என்ன நினைக்கிறீங்க?
தொழில்நுட்பம் பத்தி என்ன நினைக்கிறீங்க? என்று விழாக்காலங்களில் பிரபல்ய ஹீரோ ஹீரோயின்களிடம் பேட்டி எடுப்பது போல் இருந்தால் என்ன பதில் சொல்றதுன்னு திகைச்சுப் போயிட்டேன். (மவனே மத்தவங்க எழுதுனத படிக்க மட்டும் தெரியுது எழுதமாட்டியோன்னு யாரும் திட்டாதீங்க) இப்படியான சிக்கல்கள் ஒருபுறம் அதிகப்படியான ஆபீஸ் வேலைகள் மறுபுறம் (ஆமா... அப்படியே வேளை இல்லைன்னாலும் எழுதிக் கிழிச்சன்னு யாரோ சொல்றது கேட்குது)
இப்ப தீவாளி லீவுல அதுனால இதுக்கு ஒரு முடிவு கட்டிறனும்னு எழுதிட்டேன்.
அதுக்கப்புறம் முக்கியமான விஷயம் இந்த ஆட்டத்தைத் தொடர யாரையாவது அழைக்கனுமாமே? என்னதான் ரூல்ஸ் இருந்தாலும் பரவாயில்லை அய்யோ பாவம் யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு சும்மா இருக்கலாம்னு நினைச்சா சட்டுன்னு ஒன்னு தோனி்ச்சு...
(ஏற்கனவே நிறைய பேர் எழுதிட்டாங்கடா சோம்பேறி... நீ யாரைக் கூப்பிட்டாலும் அவங்க எழுதியிருப்பாங்க)
அய்யோ யாரு திடீர்னு திட்டுறது? (ஓ! மனசாட்சியா?)
நம்மல மாதிரியே தொடர்பதிவு எழுத ஆசைப்பட்டு யாராலும் அழைக்கப்படாமல் சிலர் இருப்பாங்க. அப்படித் தேடி மூன்று பேரை மட்டும் அழைக்கிறேன்.
மின்னல் - சுமதி
ஊஞ்சல் - தாரணி பிரியா
நல்ல நண்பன் - பாபு
கா.மு - கா.பி. - ரிவர்ஸபுல் (Reversable)
பதிவுலக நண்பர் வால்பையன் அவர்களின் ர்ரிவர்ஸபுல்(irreversable) ஒரு புதிய முயற்சி என்ற இந்தப் பதிவையும் இதற்கு முந்தைய ர்ரிவர்ஸபுல் பற்றிய பதிவையும் படித்து விட்டு இதுபோல் ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
பாவம் சக பதிவர்களை கஷ்டத்திற்குள்ளாக்க வேண்டாம் என்ற நல்ல நோக்கத்தில் அந்த முயற்சியை மறந்திருக்கும் போது இன்று தினமணி இணைப்பு இதழான தினமணி கதிரில் ‘பேல் பூரி’ என்ற பகுதியைப் படித்தேன். அதில் வந்த ஒரு பகுதி மிகவும் பிடித்திருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இனி ரிவர்ஸபுல்
காதலிப்பதற்கு முன்
அவன்: “ஆம். எதிர் பார்த்துதான் காத்திருக்கிறேன்”.
அவள்: ‘‘என்னை விட்டு பிரிய நினைக்கிறாயா?”
அவன்: “இல்லை. அப்படி நினைக்காதே.”
அவள்: “என்னைக் காதலிக்கிறாய் தானே?”
அவன்: “நிச்சயமாக... நிச்சயமாக...”
அவள்: “உன்னை நம்பி மோசம் போய் விடமாட்டேனே?”
அவன்: “தயவு செய்து இப்படியெல்லாம் கேட்காதே...”
அவள்: “என்னை முத்தமிடுவாயா?”
அவன்: “வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம்...”
அவள்: “எப்போதாவது என்னை அடிப்பாயா?”
அவன்: “உனக்கு என்ன பைத்தியமா? அப்படியெல்லாம் யோசிக்காதே”
அவள்: “எப்போதும் என்னோடுதானே இருப்பாய்?”
அவன்: “யெஸ்... யெஸ்...”
அவள்: “டார்லிங்!”
காதலித்ததிற்குப் பின்னான கதையைக் கீழே இருந்து மேலே படித்துப் போகவும்.
