“போட்டு விடு” என்று கைகளை நீட்டிக் கொண்டு நிற்பாள்.
பிடுங்கிக் குடிப்பாள்.
ராணியாயிருக்கலாமில்ல...” அம்மா அவளிடம் சொல்லும்போதெல்லாம் அவள் என்னைப் பார்த்துச் சிரிப்பாள். அது
சிரிப்பில்லை என்பது எனக்குப் புரிய ரெம்ப வருடங்களானது.
இருந்தாள். அந்தச் சிரிப்புச் சத்தம் கேட்கவே முடியவில்லை.
அவளை மட்டும் விட்டுவிட்டுப் போயிருந்தாள் அந்த இருட்டின் வெளிச்சத்தில்.
தபூ சங்கருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்குமோ இல்லையோ. அவர் கற்பனையில்கூட இப்படி எழுதியிருக்கலாம்.ஆனால் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதெல்லாம் (இதை மட்டும் அடிக்கடி எடுத்துப் படிப்பேன்) எனக்கு என் பழைய நினைவுகள் வந்துவிடும்.
என் அக்கா மகள்.
தூரத்து உறவுதான். ஆனால் பக்கத்து வீடு. அவர் வீட்டுக்கு நான் போகும்போதெல்லாம் என் அம்மாவிடம்
“கொஞ்சம் பெரிய பையனா இருந்தா நானே கட்டிக்கொள்வேன்” என்று கூறுவார்கள்.
என் அம்மாவிற்கு மொத்தம் 5 அண்ணன்கள் 1 தம்பி. சிலநாட்கள் கழித்து 10வது முடித்து மேலும் படிக்க வெளியூர் சென்று ஒருநாள் விடுமுறையில் திரும்பி வரும்போது என் அம்மாவின் தம்பிக்கு (என் மாமா)
திருமணம். எனக்கு அத்தையாக வந்தது ‘என்னைக் கட்டிக்கொள்கிறேன்’ என்று கூறிய என் அக்காவின் மகள்தான். என்னை மாமா என்று கிண்டலுக்காக அழைத்த அவங்க இன்று எனக்கு அத்தை. ஆனால் அப்படியே மாறாமல் இன்னமும் மாமா
என்றே அழைப்பார்கள். எனக்கே சங்கடமாக இருக்கும். என் ஆறு அத்தைகளை விட இவர்கள்தான் என் மீது அதிக அன்புடன்
இருப்பார்கள். மாமா வீட்டிற்கு சென்றால் சாப்பிடாமல் அனுப்ப மாட்டார்கள். ஹோட்டல், பார்க், பொருட்காட்சி, சினிமா என்று
எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வேன் என்று பிடிவாதமாக இருப்பார்கள். (அப்போதும் எனக்கு சின்னவயதுதான்). ஒருநாள் எங்க மாமா வீட்டில் ஒரு ஃபங்ஷன். எல்லா மாமா அத்தைகளும் ஒன்றாக இருக்கும் போது பேச்சு அவர்களின்
பிள்ளைகளைப் பற்றி போனது. எங்க வீட்டுலதான் உங்க மகனுக்கு பொண்ணு கட்டனும் என்று எல்லா அத்தையும் போட்டி
போட்டுக் கொண்டு சொன்னபோது, என் அக்கா மகள் என் அத்தை என்னிடம் “இங்க பாரு... என் மகளத்தான் நீ கட்டிக்கனும்.
இல்லை நடக்குறதே வேற” என்று ரெம்பவே சீரியஸாகக் கூறினார்கள். பின் பேச்சு வேறு பக்கம் சென்று எல்லோரும் இந்த
டாபிக்கையே மறந்து விட்ட நிலையிலும் எல்லோரும் சென்ற பின் என் அக்கா மகள் என்னிடமும் என் அம்மாவிடமும்
கூறினார்கள். என் மகளை நீ தான் கட்டிக்கனும். அதற்கு எம் அம்மா அவனுக்கே 17வயது
ஆகிவிட்டது இனிமேல் நீ பிள்ளை பெற்று அவளை கட்டிக்கவா? இதெல்லாம் நடக்குற காரியமா? சும்மா பேச்சுக்கு கிண்டல்
பண்ணு சரி. ஆனால் நீ ஏன் இவ்வளவு சீரியஸாகப் பேசுற
ஒரு நாள் லீவில் வந்திருக்கும் போது என் அம்மா சொன்னார்கள். மாமிக்கு கர்ப்பப்பையிலே கேன்சராம். ஆபரேஷன்
செய்தால்தான் பிழைக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். ஆனால் இது மாமிக்கு தெரியாது என்று சொன்னார்கள். அத்தையைப் பார்க்க மாமா வீட்டிற்கு சென்றபோது ஹாஸ்பிடல் சென்று கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் என் மாமி
கூறினார். “நான் கர்ப்பமாயிருக்கேன். எனக்கு கண்டிப்பாக பொம்பளப் பிள்ளைதான் பிறக்கும். நீதான் கட்டிக்கனும்.” என்று
சொன்னபோது எனக்கு வந்த அழுகையை அடக்கிக் கொள்ள ரெம்பவே கஷ்டப்பட்டேன். கடைசிநேரம் வரை கர்ப்பப்பையை எடுக்க சம்மதிக்காமலேயே இறந்து விட்டார். என் நினைவில் நின்றவர்களில் முதலிடம் அவருக்கு மட்டுமே என்றும்.