Wednesday, July 23, 2008

தமிழச்சிக்கு ஓர் வேண்டுகோள்

என்னமோ உங்களுக்கு மட்டும்தான் பெண்ணியம் தெரியும் என்பது போலவும் நீங்கள் மட்டும்தான் பெண்ணியத்தை உயர்த்திப் பிடிப்பது போலவும் ஏதேதோ கிறுக்கி விடுகின்றீர்கள். (கிறுக்கல் என்று சொன்னதற்கு மன்னிக்கவும். இது என் வார்தை அல்ல. இந்தப் பதிவில் கண்டது.) உங்களை விடவும் பெண்களைவிடவும் எவ்வளவோ பெண்களை மதிக்கும் ஆண்கள் உள்ளனர். பெண்ணியம் பேசுவது இன்று ஃபேஷனாகி விட்டது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அல்லது பெண்களே படிக்கக் கூசும் அளவு வக்கிரமாக எழுதி விட்டால் இன்று பெண்ணிய வாதிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள். இந்த வக்கிரங்களை ரசிப்பதற்கும் புகழ்வதற்கும் (எனக்குத் தெரிந்து இளையகவி, லக்கி லுக் போல்) ஒரு கூட்டம் இந்த ஜொள்ளர்களின் ஜொள்ளுக்குப் பின் ஒழிந்திருக்கும் ஆணாதிக்கத்தைக்கூட அறியாத தமிழச்சியெல்லாம் பெண்ணியம் பேசும் போதாத காலம் இது.தமிழச்சி அவர்களே! உங்களை மதிக்கிறோம். உங்கள் கருத்துக்களைப் போற்றுகிறோம். இந்த நவநாகரீக உலகில் பெண்களுக்கு எதிராய் பெண்களே செயல்படும்போது பெண்ணியம்பேச உங்களைப் போல் ஒருவர் இருக்கின்றார் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் அதில் சேற்றை வாரியிறைப்பதாக உங்கள் எழுத்துக்கள் ஒருபோதும் இருந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் தாழ்மையான வேண்டுகோள்.இந்த வேண்டுகோள் தமிழச்சிக்கு மட்டுமல்ல. பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகள் அனைவருக்கும்தான். அல்லது இப்படித்தான் பெண்ணியம் பேசுவோம் என்றால் அப்படிப்பட்ட பெண்ணியம் எங்களுக்குத் தேவையில்லை என்று பெண்கள் குரல் கொடுப்பார்கள்.எனது இந்தப் பதிவையும் கொஞ்சம் படித்துக் கொள்ளுங்கள்.

Monday, July 21, 2008

அதுதானா இது?


இது ஒரு பொருளின் ஒரு பகுதி
என்ன பொருள் அது?
இது தானா?
இது இப்ப ரெம்ப சர்வசாதாரணமா ஆயிடுச்சி.
பொட்டி தட்டுறவங்க எல்லோருமே இத இப்ப அதிகமா பயன்படுத்துறாங்களாம்.
டிஸ்கி: நல்லா பார்த்து என்னதுன்னு சொல்லனும்
பின்னூட்டத்துலயும் “அதுதானா இது?” என்று சும்மா சொல்லிட்டு போகக்கூடாது.

Thursday, July 17, 2008

இங்கிதமில்லாத இளையராஜா

ஸ்ரேயா கோஷல் பாடும் இந்தப் பாடலிலும் இந்தக் காட்சியிலும் பாராட்ட வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றது.

குரல் அழகு

மேனரிஸம்

புத்திசாலித்தனம்

புரிந்துணர்வு

தன்னடக்கம்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜானகியின் அதே குரலில் கேட்பதைவிட இந்தப் பாட்டை ஸ்ரேயாவின் குரலில் கேட்பதற்கு இன்னும் நன்றாக இருக்கிறது.

பல்லவியை ஒவ்வொருமுறை முடிக்கும் போதும் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதுபோல் ஒரு சுற்று சுற்றிவருவது மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.

அந்நிய மொழியில் அற்புதமாக பாடுகிறார்.

பிறமொழிப் பாடகர்கள் தமிழில் பாடும் போது தமிழை மட்டுமல்ல எதை எதையெல்லாமோ கொலை செய்கின்றார்கள். “ஈஸ்வரா வானும் மண்ணும் ஹேண்ட்ஷேக் பன்னுது உன்னால் ஈஸ்வரா” என்ற பாடலைப் பாடச் சொல்லும் போது அந்தப் பாடகர் (பெயர் தெரியவில்லை) “பிரியமான பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லே” என்று பாடுவதற்கு பதில் பெரியம்மாவின் பொண்ணை ரசிக்கலாம்” என்று பாடினாராம்.

அந்த அளவு மோசமாகப் பாடாவிட்டாலும் ரெம்பவே அழகாகப் பாடியிருக்கிறார் ஸ்ரேயா.

இதில் ஒரு சிறிய தவறு “காணாத ஒன்றைத் தேடுதே” என்பதற்கு பதில் ‘தோடுதே’ என்று பாடிவிட்டார். ஆனால் பார்வையாளர்களின் ரியாக்ஸனைப் பார்த்து விட்டு அதனை கடைசியாகப் படிக்கும் போது சரியாக ‘தேடுதே’ என்று படித்து விட்டார். ரசிகர்கள் கைதட்டியதும் சிரிக்கவும் செய்கிறார். எவ்வளவு அருமையான அப்ஸர்வேஷன். ரியலி கிரேட்.

இவருடைய இந்த திறமையைப் பாராட்டி இளையராஜா கூறியதுதான் சற்று அல்ல ரெம்பவே நெருடலான விஷயம்.

“திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”

எதற்கு எந்த உதாரணத்தைக் கூற வேண்டும் என்ற முறையின்றி கூறியிருக்கிறார்.

நல்லவேளை ஸ்ரேயாவுக்கு தமிழ் தெரியாது. ஏதோ இளையராஜா தன்னை ரெம்பவே பாராட்டுகிறார் என்று சிரித்துக் கொண்டே நின்றார் ஸ்ரேயா. பின்னால் ஒருநாள் தமிழ் தெரிந்து இந்த கிளிப்பை பார்க்க நேரிட்டால் கண்டிப்பாக வருந்துவார்.
இதற்கு பதிலாக இளையராஜா பாராட்டாமலேயே இருந்திருக்கலாம்.

டிஸ்கி: எப்படியே ஸ்ரேயா ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை அவரின் தரிசனம் இந்தப் பதிவின் மூலம். என்ஜாய் மக்கள்ஸ்.