Saturday, June 20, 2009

ஜில்லென்று ஒரு ரயில் பயணம்

அன்பு நண்பர்களே!

ப்ளாக் பக்கம் வந்தே பல மாதங்கள் ஆகிவிட்டன. மீண்டும் எழுத வந்திருக்கிறேன். இந்த முறை நான் எழுதுவதோடு மட்டுமின்றி பிற பதிவர்களையும் எழுத வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பதிவை இடுகின்றேன். (அவங்கள்லாம் ஏற்கனவே ரெம்ப எழுதிக்கிட்டுதான் இருக்காங்க - அது வேற விஷயம்)

இது ஒரு தொடர் பதிவு.

அய்யோ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! தொடர் பதிவு என்றதும் ஓடி ஒளிந்து கொள்ளாதீர்கள். என் அன்புக் கட்டளையை ஏற்று செயல்படுத்துவீர்கள் என்று நினைக்கிறேன். சரி விஷயத்திற்கு வருவோம். கீழே உள்ள வீடியோ கிளிப்பிங் சமீபத்தில் நான் பார்வையிட்டது.
நீங்களும் பார்வையிடுங்கள். பதிவிடுங்கள்.
ஆம்! இந்த கிளிப்பிங்கைப் பார்த்து விட்டு இதற்கு தகுந்த சிறுகதை ஒன்று (அது பெரிய சிறுகதையாகவும் இருக்கலாம், ஒருபக்க சிறுகதையாகவும் இருக்கலாம்) எழுதிப் பதிவிட வேண்டும். கண்டிப்பாக படத்திற்கு தகுந்த கதையாக இருக்க வேண்டும்.

வீடியோ கிளிப்பிங் போகலாமா!

இரத்தத்தை உறைய வைக்கும் இரயில் பயணம்!

முன் குறிப்பு: பெண்கள், குழந்தைகள், இதய பலவீனமுள்ளவர்கள் தயவு செய்து படக் காட்சியைப் பார்வையிட வேண்டாம்.


பின் குறிப்புகள்:
1. படக் காட்சிக்கு தகுந்த சிறுகதை எழுதிப் பதிவிட வேண்டும்.
2. நீங்கள் பதிவிடும் தளத்திலும் இந்த கிளிப்பிங்கை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது எனது தளத்திற்கும் லிங்க் கொடுக்கலாம்.
3. குறைந்தது அடுத்த இரண்டு பதிவர்களை அழைக்க வேண்டும்.
4. மறக்காமல் பதிவிட்டபின் எனக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
5. ரெம்ப முக்கியம் கமென்ட் போட்டுட்டுப் போங்க! (கேட்டு வாங்குறது அசிங்கமாத்தான் இருக்கு - இருந்தாலும் பரவாயில்லை)என்ஜாய் மக்கள்ஸ்!

நான் அழைக்கும் இரு பதிவர்கள்:
1. கதாசிரியை திவ்யா
2. சாத்தான் குளம் ஆசிப் மீரான்

பி.பி. குறிப்பு:
இரண்டாம் பதிவரை நான் அழைக்கக் காரணம் அடுத்த பதிவில்...