Tuesday, November 4, 2008

அல்லாவும் ஈஸ்வரனும் வால்பையனும்

இதற்கு முந்தைய சினிமா பற்றிய தொடர்பதிவில் ஒரு கேள்வி

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
பழையதில் கிழக்குச் சீமை - இன்றுவரை அண்ணண் தங்கை பாசம் என்றால் பாசமலர் படத்தைத்தான் சொல்வார்கள். ஆனால் எனக்கு என்னவோ கிழக்குச் சீமை முன்னதை முந்திவிட்டதாகத் தோன்றுகிறது. ஏ.ஆர்.ஆர். இசையும் ஒரு காரணம். புதியதில் அரண் - படம், சினிமா கலை, நுணுக்கம் இதையெல்லாம் தாண்டி நம் நாட்டிலேயே நம் இராணுவத்தால் பாதிக்கப்படும் கஷ்மீரிகளின் சோகங்கள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.

இந்த பதிவுக்கு நண்பர் வால்பையன் பின்னூட்டமிட்டிருந்தார். நானும் பதில் கூறியிருந்தேன்.சாட்டிலும் பேசினோம். அவற்றை கீழே தருகிறேன்.

வால்பையன் said...
//அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//
இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது!
ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு

புகழன் said...
---வால்பையன் said... /
அதில்வரும் “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//
இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது!ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு
---ராமன் அப்துல்லா படத்துல என்ன பாட்டு வரும்? நான் அந்தப் படம் பார்க்கவில்லை.

புகழன் said...
இப்பத்தான் கூகுள்ல தேடினேன்.
அந்தப் படத்தில் வரும் பாடல் “உன் மதமா” பாடல்
அதுவும் பிடிக்கும்.
கேட்டிருக்கிறேன்.

வால்பையன் said...
நானும் அதைத் தான் சொன்னேன். மதத்தை தேடி நாம் போகவேண்டியதில்லை.நல்லவர்களை தேடி மதம் வரும்.

புகழன் said...
அது சரி “அல்லாவே எங்களின் தாய் பூமி” என்ற பாடலில் எங்கே மதம் வருகிறது?
இந்த அளவு கொஞ்சம்கூட புரியாமல் கண்ணில் கடவுள் மறுப்பு என்னும் திரையைப் போட்டு எல்லாவற்றையும் பார்ப்பது ஏன்?
எனக்குப் பிடிக்கும் என்று சொன்ன அந்தப் பாடலில் கஷ்மீரிகளின் துயரம் பற்றிய வரும் அவ்வளவே..
மதம் பற்றியோ, கடவுள் பற்றியோ அதில் குறிப்பிடப்படவே இல்லை.
யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வால்பையன் said...
அல்லா என்பதன் சரியான அர்த்தம் எனக்கு தெரியாது தான். ஆனாலும் பள்ளியில் படிக்கும் சிறுவனைக் கேட்டாலும் அல்லா என்பது முசல்மான்களின் கடவுள் என்று தான் சொல்லுவான். உண்மையில் அந்த பாட்டை நான் கேட்டதில்லை. அந்த பாட்டில் எங்கேயெனும் மக்களின் துயரம் இருக்கலாம். முதல் வரியில் அது எனக்கு தெரியவில்லை.

வால்பையன் said...
//யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.//
கடவுள் மறுப்பு என்பது திரை அல்ல. அதுவே விளிப்பு நிலை.

இனி சாட்
11:40 AM வால்: :)
11:42 AM me: ஏங்க நான் பொதுவா யதார்த்தமா எழுதுறதயெல்லாம் ஒருசார்பா எழுதுற மாதிரி கமென்ட் போடுறீங்க?
வால்: :)
11:43 AM appati illai
manathil iruppathu thaan veliyil varum
athu ungkalukkum enakkum porunthum
me: அந்த பாடல் கேட்டுள்ளீர்களா?
11:44 AM வால்: illaiyenru terkanave sollivitten
me: லிங்க் தருகிறேன் கேளுங்கள்
-------------------------------------------------
அதுவே இந்தப் பதிவு இப்படி இருந்திருந்தால்?

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
........................... ......... ....
புதியதில் கண்ணெதிரே தோன்றினாள் - படம், சினிமா கலை, நுணுக்கம் இதையெல்லாம் தாண்டி நட்புக்கும் காதலுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை யதார்த்தமாக சொல்லியிருப்பார்கள். அதில்வரும் “ஈஸ்வரா வானும் மண்ணும்” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.

வால்பையனுடைய பின்னூட்டம் இப்படித்தான் இருந்திருக்குமோ?

வால்பையன் said...
//அதில்வரும் “ஈஸ்வரா வானும் மண்ணும்” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//
இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது! ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு

புகழன் said...
---வால்பையன் said... //அதில்வரும் “ஈஸ்வரா வானும் மண்ணும்” என்ற பாடல் ரெம்பவும் பிடிக்கும்.//
இதுதாங்க உங்ககிட்ட புடிக்காது! ராமன் அப்துல்லா படத்துல ஒரு பாட்டு வருமே அது புடிக்காதா உங்களுக்கு
---ராமன் அப்துல்லா படத்துல என்ன பாட்டு வரும்? நான் அந்தப் படம் பார்க்கவில்லை.

புகழன் said...
இப்பத்தான் கூகுள்ல தேடினேன்.
அந்தப் படத்தில் வரும் பாடல் “உன் மதமா” பாடல்
அதுவும் பிடிக்கும்.
கேட்டிருக்கிறேன்.

வால்பையன் said...
நானும் அதைத் தான் சொன்னேன். மதத்தை தேடி நாம் போகவேண்டியதில்லை. நல்லவர்களை தேடி மதம் வரும்.

புகழன் said...
அது சரி “ஈஸ்வரா வானும் மண்ணும்” என்ற பாடலில் எங்கே மதம் வருகிறது?
இந்த அளவு கொஞ்சம்கூட புரியாமல் கண்ணில் கடவுள் மறுப்பு என்னும் திரையைப் போட்டு எல்லாவற்றையும் பார்ப்பது ஏன்?
எனக்குப் பிடிக்கும் என்று சொன்ன அந்தப் பாடலில் நட்பின் பயன்கள் பற்றி வரும் அவ்வளவே..
மதம் பற்றியோ, கடவுள் பற்றியோ அதில் குறிப்பிடப்படவே இல்லை.
யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வால்பையன் said...
ஈஸ்வரா என்பதன் சரியான அர்த்தம் எனக்கு தெரியாது தான். ஆனாலும் பள்ளியில் படிக்கும் சிறுவனைக் கேட்டாலும் ஈஸ்வரா என்பது இந்துக்களின் கடவுள் என்று தான் சொல்லுவான். உண்மையில் அந்த பாட்டை நான் கேட்டதில்லை. அந்த பாட்டில் எங்கேயெனும் நட்பு இருக்கலாம். முதல் வரியில் அது எனக்கு தெரியவில்லை.

வால்பையன் said...
//யார் என்ன சொன்னாலும் கடவுள் மறுப்பு என்ற திரையை கண்ணில் போட்டு விட்டு பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.//
கடவுள் மறுப்பு என்பது திரை அல்ல. அதுவே விளிப்பு நிலை.

பி.கு: எப்டில்லாம் யோசிக்கிறாங்கப்பா................ தாங்க முடியல....