Saturday, March 15, 2008

முரண் சிந்தனைகள்

தான்தோன்றித்தனமாக கைக்கு வந்ததையெல்லாம் தட்டி விட்டுப் போக வேண்டும் என்ற வரைமுறையற்ற வரையறைகளில் சிக்கி விடாமல் உருப்படியாக எழுத வேண்டும் என்றுதான் இந்தத் தளத்தைத் துவங்கினேன்.
வலைதளத்திலிருந்து எடுத்து காப்பியடித்து எழுதி அதை விவாதமாக்கிக் கொண்டுள்ளனர் பலர்.
இன்று பல வலைதளத்தில் நுழைந்து வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஏதோ ஒன்றைத் தேடப்போக எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
இவற்றை வாசிக்கும்போது எனக்கு என் சீனியர் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.
“டேய், ஃபேமஸ் ஆனனும்னா கண்டதையும் எழுதனும்டா. எல்லாரும் சொல்லுற விஷயத்தை நீ எப்படி மறுத்துக் கருத்துச் சொல்லுறங்குறதப் பொறுத்துத்தான் உன் பிரபல்யம் ஊர்ஜிதமாகுது. நமக்குன்னு ஒரு தளத்தை வாசிப்பவர்கள் மத்தியில கிரியேட் பண்ணிட்டு, பிறகுதான் நம்ம கருத்தை மக்கள் மத்தியில வைக்க வரணும். அவர்கள் நமக்கு வாசகர்களாகத்தான் இருக்கனும்னு இல்லை. விமர்சணம் பண்ணுறவங்களாகக்கூட இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் விமர்சணம் பண்ணுறவங்கள அதிகமா இருந்தாத்தான் நீ சீக்கிரமே ஃபேமஸ் ஆக முடியும். அதுக்கப்புறம் நீ நினைக்கிற கருத்தை சொல்லும்போது அது மக்கள்ட்ட சீக்கிரமே ரீச் ஆகும். இது ஒண்ணும் நாம கொண்டிருக்கிற கொள்கைக்கு மாற்றமாகவோ முரணாகவோ செய்யிறது இல்லை. நல்லா யோசிச்சுப்பாரு தெரியும்.” என்று சொன்னார்.
இதுவும் ஒரு வகையில் சரியாத்தான் பட்டது.
உண்மைய சொல்லப்போனா இப்படியான முரண் சிந்தனைகள் எனக்கு ரெம்பப் பிடிக்கும். எதையுமே முரணாகவே சிந்தித்து கருத்துக் கூறுவதே என் வழக்கம்.ஃபவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங் என்ற புத்தகத்தைப் படித்ததும் எனக்குள்ள ஒரு ஆசை நாமலும் இங்கிலீஸ்ல தெறமைய வளர்த்துக்கிட்டு எப்படியாது ஒரு புக் எழுதனும் “ஃபவர் ஆஃப் நெக்கட்டிவ் திங்கிங்ஸ்” ன்னு.ஆனா இன்னைக்கு வரை ஆங்கில அறிவை வளர்க்க ஒரு சின்ன துரும்பைக் கூட அசைச்சதில்லை.சில நேரங்களில் இந்த முரண் சிந்தனை என்னை ரெம்பவே அதிகம் தெரிய வச்சிடுச்சி.
ஒருத்தர் சொல்லுற கருத்து சரியாவே இருந்தாலும் அதை முரணா சிந்திச்சிதான் ஏத்துக்குவேன்.
இப்படித்தான் அந்த சீனியர் சொன்னதையும் முரணாவே சிந்திச்சேன்.
ஏன் ஒழுங்காவே எழுதி ஃபேமஸ் ஆனவங்க யாருமே இல்லையான்னு அவர்கிட்ட திருப்பிக்கேட்டேன்.
இப்படியாக பல விவாதங்கள் எங்களுக்குள் நடந்தது.
இது இருக்கட்டும். இப்பல்லாம் அதிகமான நேரம் நெட்டில் உட்கார நேரம் கிடைக்கிறது. நிறைய படிக்க முடியுது. அதனால நிறைய எழுதனும் தோனுது. ஆனாலும் அது எல்லாத்தையும் முரண் சிந்தனையிலேயே எழுதினா என்னன்னும் தோனுது. இனி வரும் பதிவுகள் கூட (எல்லாமே இல்லாவிட்டாலும்) ஒரு சிலதாவது என் முரண் சிந்தனையோட பதியப்படும்.
எதிர்க்கருத்துக்களை எதிர்பார்த்து
என்றும் உங்கள் புகழன்

2 comments:

Divya said...

தொடரட்டும் உங்கள் முரண் சிந்தனையின் வெளிப்பாடு!!

cheena (சீனா) said...

முரண் சிந்தனை வரவேற்கத் தக்கதே ! விளைவுகள் ஆக்க பூர்வமாகத் தான் அமையும் - நல்வாழ்த்துகள்