Wednesday, July 23, 2008
தமிழச்சிக்கு ஓர் வேண்டுகோள்
Monday, July 21, 2008
அதுதானா இது?

Thursday, July 17, 2008
இங்கிதமில்லாத இளையராஜா
ஸ்ரேயா கோஷல் பாடும் இந்தப் பாடலிலும் இந்தக் காட்சியிலும் பாராட்ட வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றது.
குரல் அழகு
மேனரிஸம்
புத்திசாலித்தனம்
புரிந்துணர்வு
தன்னடக்கம்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஜானகியின் அதே குரலில் கேட்பதைவிட இந்தப் பாட்டை ஸ்ரேயாவின் குரலில் கேட்பதற்கு இன்னும் நன்றாக இருக்கிறது.
பல்லவியை ஒவ்வொருமுறை முடிக்கும் போதும் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதுபோல் ஒரு சுற்று சுற்றிவருவது மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.
அந்நிய மொழியில் அற்புதமாக பாடுகிறார்.
பிறமொழிப் பாடகர்கள் தமிழில் பாடும் போது தமிழை மட்டுமல்ல எதை எதையெல்லாமோ கொலை செய்கின்றார்கள். “ஈஸ்வரா வானும் மண்ணும் ஹேண்ட்ஷேக் பன்னுது உன்னால் ஈஸ்வரா” என்ற பாடலைப் பாடச் சொல்லும் போது அந்தப் பாடகர் (பெயர் தெரியவில்லை) “பிரியமான பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லே” என்று பாடுவதற்கு பதில் பெரியம்மாவின் பொண்ணை ரசிக்கலாம்” என்று பாடினாராம்.
அந்த அளவு மோசமாகப் பாடாவிட்டாலும் ரெம்பவே அழகாகப் பாடியிருக்கிறார் ஸ்ரேயா.
இதில் ஒரு சிறிய தவறு “காணாத ஒன்றைத் தேடுதே” என்பதற்கு பதில் ‘தோடுதே’ என்று பாடிவிட்டார். ஆனால் பார்வையாளர்களின் ரியாக்ஸனைப் பார்த்து விட்டு அதனை கடைசியாகப் படிக்கும் போது சரியாக ‘தேடுதே’ என்று படித்து விட்டார். ரசிகர்கள் கைதட்டியதும் சிரிக்கவும் செய்கிறார். எவ்வளவு அருமையான அப்ஸர்வேஷன். ரியலி கிரேட்.
இவருடைய இந்த திறமையைப் பாராட்டி இளையராஜா கூறியதுதான் சற்று அல்ல ரெம்பவே நெருடலான விஷயம்.
“திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”
எதற்கு எந்த உதாரணத்தைக் கூற வேண்டும் என்ற முறையின்றி கூறியிருக்கிறார்.
நல்லவேளை ஸ்ரேயாவுக்கு தமிழ் தெரியாது. ஏதோ இளையராஜா தன்னை ரெம்பவே பாராட்டுகிறார் என்று சிரித்துக் கொண்டே நின்றார் ஸ்ரேயா. பின்னால் ஒருநாள் தமிழ் தெரிந்து இந்த கிளிப்பை பார்க்க நேரிட்டால் கண்டிப்பாக வருந்துவார்.
இதற்கு பதிலாக இளையராஜா பாராட்டாமலேயே இருந்திருக்கலாம்.
டிஸ்கி: எப்படியே ஸ்ரேயா ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை அவரின் தரிசனம் இந்தப் பதிவின் மூலம். என்ஜாய் மக்கள்ஸ்.