எனக்கு வந்த ஒரு SMS இது.
Believe It or Not:
Time can be reversed once in your lifetime.
If you leave Tokyo by Plane at 7.00am.,
you will arive in Honolulu (US) at approx 4.30pm
the previous day...
உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.
டிஸ்கி: இதை யாராவது அழகிய தமிழில் மொழியாக்கம் செய்து இன்னும் விரிவாக விளக்கி பதிவு போடவும்.
Monday, June 23, 2008
Sunday, June 8, 2008
நான் எழுதிய கவிதை
நான் எழுதிய கவிதைகளில் அழகானதை கீழே கொடுத்துள்ளேன்.
படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்

படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்

ஒரு ஒயிட் போப்பரை எடுத்து அதில கவிதை கவிதைன்னு நிறைய எழுதிப் பார்த்தேன்.
அதுல இது மட்டும்தான் அழகா இருந்துச்சு அதனாலதான். அதை நீங்களும் பார்க்கனுமேனுதான்......
Wednesday, June 4, 2008
சந்தேகம்
தரணியின் நடத்தையில் கடந்த ஒருவாரமாக மாற்றங்களைக் கண்டாள் சங்கீதா.
இன்று இரவு கேட்டும் வைத்தாள். “ஏங்க, இன்னிக்கு பூ வாங்கிட்டு வரலையா?” ரொம்பவும் ஆசையுடன் கேட்டாள்.
“இல்ல, மறந்துட்டேன். நாளைக்கு வாங்கிட்டு வாரேன்” எந்தவொரு அக்கறையும் இல்லாமல் சொன்னான் தரணி. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வாங்கிவரவில்லை.
திருமணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகிறது. காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து, தனிக்குடித்தனம் நடத்தும் சங்கீதாவுக்க மனதே சரியில்லை.
முதன் முறையாக கணவனின் நடத்தையில் சந்தேகம் கொண்டாள். ‘வேலை முடித்து வீட்டுக்கு சீக்கிரம் வருபவர், கொஞ்ச நாளா ரொம்ப லேட்டா வர்ராரே?’ மனதின் எண்ணங்கள் தப்பாக கணக்குப் போட்டது.
ஒருநாள் இரவு தாமதமாக வந்த சமயம் பார்த்து சங்கீதா தாண்டவமாடத் துவங்கினாள்.
“எவ கூட சுத்திட்டு வர்ரீங்க... ஒரு மாசமா பார்க்கிறேன், உங்க நடத்தையே சரியில்லை. யாரு அந்த சக்களத்தி..” தலையணையில் முகம் புதைத்து அழுதுவிட்டாள்.
இப்போதும் எதுவுமே கேட்காமல் தரணி தூங்கிவிட்டான்.
மாதத்தின் முதல்நாள். மாலை சீக்கிரமே வீ்ட்டுக்கு வந்த தரணி கையில் ஸ்வீட்பாகஸ், சேலை, மல்லிகைப்பூ சகிதமாக வீட்டிற்குள் நுழைந்தான்.
சங்கிதா முகம் கொடுக்காமல் திரும்பியிருந்தாள். தரணி வாய் திறந்தான்.
“சங்கீ... போன மாதத்தி்லேர்ந்து வேற கடையில சேர்ந்துட்டேன். ”
அவன் பேசிக் கொண்டிருக்க சங்கீதா அமைதியாயிருந்தாள்.
“ஏற்கனவே வேலை செய்த டெய்லி சம்பளம் தரும் கடையலிருந்து நின்னுட்டதால கையில காசு இல்லாம உனக்கு எதுவுமே வாங்கி வர முடியலை.”
சங்கீதா அவனைப் பார்க்க, “இப்ப மாதச் சம்பளம் தரும் கடையில் வேலை செய்கிறேன். நமக்கு குழந்தை பிறந்தவுடன் செலவு அதிகமாயிருக்கும், பின்ன அதை நல்ல படிக்க வைக்கனும் இப்படி எல்லாத்துக்கும் சேர்த்து இப்பவே அதிகமாக சம்பாதிக்கனும் சேர்த்து வைக்கனும். எக்ஸ்ட்ரா டைம் ட்யூட்டி பார்த்தால் அதிக சம்பளம் கிடைக்கும். அதான் டெய்லி லேட்டா வர்ரேன்” என்றான்.
அவள் கண்கலங்கினாள். அவள் கண்களைத் துடைத்தவனாக, “இன்னிக்கு சம்பள நாள், உனக்கு....” என்று வாங்கி வந்த அனைத்தையும் நீட்டினாள்.
வெகு விரைவில் நானும் கதை எழுதுவேன் (அந்தக் கஷ்டத்தையும் நீங்க சகிச்சுக்கிட்டுதான் ஆகனும்).
இன்று இரவு கேட்டும் வைத்தாள். “ஏங்க, இன்னிக்கு பூ வாங்கிட்டு வரலையா?” ரொம்பவும் ஆசையுடன் கேட்டாள்.
“இல்ல, மறந்துட்டேன். நாளைக்கு வாங்கிட்டு வாரேன்” எந்தவொரு அக்கறையும் இல்லாமல் சொன்னான் தரணி. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வாங்கிவரவில்லை.
திருமணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகிறது. காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து, தனிக்குடித்தனம் நடத்தும் சங்கீதாவுக்க மனதே சரியில்லை.
முதன் முறையாக கணவனின் நடத்தையில் சந்தேகம் கொண்டாள். ‘வேலை முடித்து வீட்டுக்கு சீக்கிரம் வருபவர், கொஞ்ச நாளா ரொம்ப லேட்டா வர்ராரே?’ மனதின் எண்ணங்கள் தப்பாக கணக்குப் போட்டது.
ஒருநாள் இரவு தாமதமாக வந்த சமயம் பார்த்து சங்கீதா தாண்டவமாடத் துவங்கினாள்.
“எவ கூட சுத்திட்டு வர்ரீங்க... ஒரு மாசமா பார்க்கிறேன், உங்க நடத்தையே சரியில்லை. யாரு அந்த சக்களத்தி..” தலையணையில் முகம் புதைத்து அழுதுவிட்டாள்.
இப்போதும் எதுவுமே கேட்காமல் தரணி தூங்கிவிட்டான்.
மாதத்தின் முதல்நாள். மாலை சீக்கிரமே வீ்ட்டுக்கு வந்த தரணி கையில் ஸ்வீட்பாகஸ், சேலை, மல்லிகைப்பூ சகிதமாக வீட்டிற்குள் நுழைந்தான்.
சங்கிதா முகம் கொடுக்காமல் திரும்பியிருந்தாள். தரணி வாய் திறந்தான்.
“சங்கீ... போன மாதத்தி்லேர்ந்து வேற கடையில சேர்ந்துட்டேன். ”
அவன் பேசிக் கொண்டிருக்க சங்கீதா அமைதியாயிருந்தாள்.
“ஏற்கனவே வேலை செய்த டெய்லி சம்பளம் தரும் கடையலிருந்து நின்னுட்டதால கையில காசு இல்லாம உனக்கு எதுவுமே வாங்கி வர முடியலை.”
சங்கீதா அவனைப் பார்க்க, “இப்ப மாதச் சம்பளம் தரும் கடையில் வேலை செய்கிறேன். நமக்கு குழந்தை பிறந்தவுடன் செலவு அதிகமாயிருக்கும், பின்ன அதை நல்ல படிக்க வைக்கனும் இப்படி எல்லாத்துக்கும் சேர்த்து இப்பவே அதிகமாக சம்பாதிக்கனும் சேர்த்து வைக்கனும். எக்ஸ்ட்ரா டைம் ட்யூட்டி பார்த்தால் அதிக சம்பளம் கிடைக்கும். அதான் டெய்லி லேட்டா வர்ரேன்” என்றான்.
அவள் கண்கலங்கினாள். அவள் கண்களைத் துடைத்தவனாக, “இன்னிக்கு சம்பள நாள், உனக்கு....” என்று வாங்கி வந்த அனைத்தையும் நீட்டினாள்.
ஆக்கம்: மால்கம்
பதித்தது: புகழன்.
நானும் சொந்தமா கதை எழுதலாம்னு நினைக்கிறேன். ஆனா அதை இந்தப் பதிவுலகம் ஏத்துக்குமான்னு நினைச்சாத்தான் ரெம்ப யோசனையா இருக்கு. அதனாலதான் என் நண்பன் எழுதிய கதைகள் இங்கே பதிவாக...வெகு விரைவில் நானும் கதை எழுதுவேன் (அந்தக் கஷ்டத்தையும் நீங்க சகிச்சுக்கிட்டுதான் ஆகனும்).
Subscribe to:
Posts (Atom)